கச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே!




Archive for May, 2017

இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள் – சீதையின் மைந்தன்

இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்

10.05.2017 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கச்சத்தீவு மீட்பு எழுச்சிப்பயணத் துவக்க விழாவில் “இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நூல் வெளியீட்டு நிகழ்சிக் காணொலியின்
youtube இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பரப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

சீதையின் மைந்தன்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்
www.katchatheevu.com


தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன் நேரில் சந்திப்பு:

கச்சத்தீவு மீட்பு இயக்கம் 10.05.2017 சென்னையில் முன்னெடுக்கும் கச்சத்தீவு மீட்பு எழுச்சிப்பயணத் துவக்க நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வில் வெளியிட உள்ள ”இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நூலின் முதற்படியைப் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியினைச் சிறப்பிக்குமாறு, ஆற்றலரசு அவர்களுடன் நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டோம். முன்னரே ஒப்புக்கொண்ட வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், இயன்றவரை நமது நிகழ்ச்சியில் பங்கேற்க முயல்வதாகவும், இயலாவிடினும் தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்நூலின் அறிமுக கூட்டங்களில் தான் நிச்சயம் கலந்து கொள்வதாகவும், நமது அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி!!.

சீதையின் மைந்தன்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்


கச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா சீமானுக்கு அழைப்பு

சீமானுடன் சீதையின் மைந்தன், ஆற்றலரசு

18301025_1940843246149553_7870101349096257952_n

10-05-2017 அன்று சென்னையில் கச்சத்தீவு மீட்பு இயக்கம் முன்னெடுக்கும் “கச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா” நிகழ்வில் பங்கேற்க நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை நேரில் சந்தித்து அழைத்தோம்.

10-05-2017 அன்று கண்ணகி கோவில் விழாவில் கலந்துகொள்ள இருப்பதால், பிறிதொரு நாளில் “இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நமது நூலை தமது கட்சி சார்பாக நூல் அறிமுக நிகழ்வு ஒன்றினை தமது அலுவலக உள்ளரங்கத்திலேயே நடத்துவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

திருமிகு. சீமான் அவர்களுக்கு கச்சத்தீவு மீட்பு இயக்கம் சார்பாக நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

சீதையின் மைந்தன்
தாயகத்தமிழர் பேரியக்கம்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்


கச்சத்தீவு மீட்பு எழுச்சிப் பயண துவக்க விழா

சீதையின் மைந்தன்

கச்சத்தீவு மீட்பு இயக்கம் சார்பாக கச்சத்தீவு மீட்பு எழுச்சிப் பயண துவக்க விழா 10-05-2017 மாலை 4 மணிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

17952575_1943293372571207_599681325993355753_n

இந்நிகழ்வில் சீதையின் மைந்தனின் “இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நூல் மக்கள் மாநாடு கட்சி தலைவர் வழக்குரைஞர் சக்திவேல் அவர்களால் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியின் முழு காணொலியும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

சீதையின் மைந்தன்
தாயகத்தமிழர் பேரியக்கம்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்